Wednesday, August 8, 2007

Very Good Morning.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
 
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
_________________________________________________________

* நிலத்தில் மின்மினிப் பூச்சியைத் தவிர ஒளி சிந்தும் வேறு பூச்சிகள் கிடையாது.

* ஜெருசலேம் என்றால் சொர்க்கத்தின் அமைதி என்று பெயர்.

* நோபல் பரிசும், பாரத ரத்னா விருதும் பெற்றவர் அன்னை தெரசா.

* நான்காம் மைசூர் யுத்தத்தில் உயிரிழந்தார் திப்பு சுல்தான்.

* எகிப்து நாட்டில் பருத்தியை வெள்ளைத் தங்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.

* புத்தர் மறைந்த இடம் குஷிநாகரா என்னும் ஊர்.

* உலகிலேயே மிகுதியான கால்நடைகளைக் கொண்ட நாடு நம் இந்தியா தான்.

* தில்லியில் உள்ள இந்தியாகேட் சுவர்களில் 13,516 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

* உலகில் அதிகம் கிளைகள் உள்ள வங்கி என்ற பெருமை பாரத ஸ்டேட் வங்கிக்கு உண்டு.

* பாம்பைப் போல் பல்லியும் சட்டை உரிக்கும்.

* பைபிளில் பெண் என்ற வார்த்தை ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* சீன மொழி டைப் ரைட்டரில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.

* சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தனி தேசிய மொழி கிடையாது.

* சினிமாவுக்காக முதன்முதலாக போஸ்டர் அடிக்கப்பட்ட படம் மாயா பஜார்.
_________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
நீதிபதி : "நீதான் தப்பு செய்யலையே... பிறகு ஏன் போலீஸைப் பார்த்ததும் ஓடினே?''

திருடன் : ''நல்லா இருக்கே நீங்க கேக்கறது! அவங்க ஏன் என்னைத் துரத்தினாங்கனு அவங்களைக் கேளுங்க எசமான்!''

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: