Friday, September 7, 2007

Very Good Morning.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
 
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
______________________________________________________________

* செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்டேடியம் தான் உலகிலேயே மிகவும் பெரியது. இதில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்க முடியும். 40 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கள் திறமைகளை காண்பிக்க முடியும்.

* கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டிப் பிடித்தால் சதம் (செஞ்சுரி) அடித்தார் என்று கூறுவதைப் போல, 'கேரம்' விளையாட்டிலும் `செஞ்சுரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது கேரத்தில் சிவப்பு நிறக் காயைத் தொடர்ந்து, 9 கருப்பு அல்லது 9 வெள்ளை நிறக் காய்களை வீழ்த்துவது `சதம்' என்று அழைக்கப்படுகிறது.
______________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே ..?

ஐயையோ .. .. அது பச்சைப் பொய் எனக்கு வருமானமே கிடையாது. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன் !

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: