Thursday, September 27, 2007

Very Good Morning.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும்.

Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
______________________________________________________

உலக வலம்..! உண்மைச் சம்பவங்கள்..!

600போலித் திருமணங்களைச் செய்து வைத்த ஒரு பாதிரியாரை என்ன செய்யலாம்? கழுத்தில் நங்கூரத்தைக் கட்டி, ஆழ்கடலில் தள்ளிவிடலாமோ?
தென் ஆபிரிக்காவின் தலைநகரான Pretoria இல்தான் இந்த அநியாயம் அரங்கேறி இருக்கின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் இந்தப் பாதிரியார், பிரஜாவுரிமை பெறுவதற்காக, 600 வெளிநாட்டவர்களுக்குத் திருமணம் செய்துவைத்த தில்லுமுல்லு வெளியாகி இருக்கின்றது.பதிவுத் திருமண அதிகாரியுமாகத் தொழிலாற்றும் இந்த 39 வயதுப் பாதிரியார் கைதாகி இருக்கின்றார். 3000 பெண்கள் வரையில், அவர்கள் அறியாமலே திருமணமாகி இருக்கும் திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கின்றது. ஒவ்வொரு போலிப் பதிவிற்கும் தலைக்கு 833 டாலர்(5000 Rand ) அறவிடப்பட்டு இருக்கின்றது. பாகிஸ்தான்,நைஜீரியா, எகிப்து, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்தே, இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வந்திருக்கின்றார்கள்.
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
செவ்வாய் கிரகத்துல தண்ணீ இருக்காமே .. .?

தண்ணீ இருக்கு சரி .. தொட்டுக்க ஊறுகாய் இருக்கா .. .?

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: